03 December, 2009

ஏன்? - தமிழும் இளைஞர்களும்...

எனக்கு இலக்கியம் மிக பிடிக்கும், இலக்கியவட்டம், இலக்கியகூட்டங்களில் கலந்து கொள்ள விரும்புவேன் - அந்த வகையில் அண்ணாநகர் தமிழ்பேரவையின் கூட்டம் ஒன்று நடப்பதாய் அறிந்து சென்ற காரிக்கிழமையன்று (சனிக்கிழமை) அதற்கு சென்றேன்.

இடத்தை கண்டறிவதிலும், பேருந்து கிடைப்பதிலும் ஏற்பட்ட சிக்கல்களால் காலம்தாழ்ந்தே சென்றேன், நான் சென்ற வேளை பேச்சாளர் ஏறத்தாழ சொற்பொழிவை முடித்திருந்தார் - திருவிளையாடற் புராணம் : வேதத்திற்கு பொருளருளி செய்த படலம்தான் தலைப்பு - எனக்கு தொகுப்புரையை மட்டுமே செவிதோய்க்க வாய்த்தது!

தொகுப்புரைக்குபின் நன்றியுரை ஆற்றியவர் உரையின் நடுவே ‘நம் கூட்டத்திற்கு இளைஞர்கள் நிறைய வரவேண்டும், அதுதான் சிறக்கும்’ என்று குறிப்பிட்டார், அனைவரது கண்ணும் சட்டென என்பக்கம் திரும்பின - காரணம் அங்கு இருந்ததில் நான் மட்டுமே (அகவையில்) இளைஞன்! நானொருவனாவது இருந்ததில் அவர்களுக்கு மெத்த மகிழ்ச்சி!

அந்த நொடி என் உள்ளத்தில் இந்த வினா எழுந்தது - பெரும்பான்மையான இளைஞர்களுக்கு இது போன்ற இலக்கிய சொற்பொழிவுகளும், உரையாடல்களும் ஏன் பிடிப்பதில்லை? இந்த வினா இதற்கு முன்னும் பலமுறை எனக்கு எழுந்திருக்கிறது - பலமுறை நான் சென்றுள்ள கூட்டங்களில் நான் மட்டுமேதான் இளைஞனாய் இருந்துள்ளேன் - அவ்ற்றில் பல இளைஞர்கள் கட்டாயம் இருக்க வேண்டிய கூட்டங்கள்! அப்பொழுதெல்லாம் எனக்கே தோன்றியோ அல்லது நண்பர்களிடம் வினவியதன் பயனாகவோ கிடைத்த பதில்கள்:

அ. அது அறுவை! ("bore adikkum!")
ஆ. அதுலாம் “பழைய” விஷயம், இப்ப உலகம் எவ்ளோ வேகமா போகுது, இன்னும் அத பத்தி எதுக்கு பேசிட்டு இருக்கனும்!
இ. அதுலாம் புரிய மாட்டேங்குது!


இவற்றுக்கு என் பதில்:

அ. புரியாததால்தான் அறுவையா இருக்கு, புரிந்தால் ஆர்வமா இருக்கும் (எப்படி புரிந்துகொள்வது? அதற்கு பதில் மூன்றைப் படிக்கவும்)
ஆ. அவை பழையவைதான் - ஆனால் அவற்றில் உள்ள நுணுக்கமும் அழகும் இன்றைய புதியவைகளில் இல்லை (இந்த பதிலின் கண்ணோட்டதில் ஒரு தனி பதிவையே போடலாம்!)
இ. சில (சரி சரி, “பல”) அரிதான, வழக்கற்ற சொற்களால் அவை புரிவது கடினமாகிறது, படிக்க படிக்க அச்சொற்கள் பழகிவிட்டால் சரியாகிவிடும்.


எனக்கு தெரிந்தவரையில் கூறிவிட்டேன்.

ஆனால், நான் பார்த்தவரையில் இணையத்தில் இருக்கும் இளைஞர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு இலக்கியங்களை அலசி ஆய்கின்றனர். சிக்கல் இயல் உலகில்தான் (அல்லது தமிழ் நாட்டில்தான், அல்லது என் பகுதியில்தான்) உள்ளது! 99% வெறும் செல்லுலாய்டு குப்பையாய் இருக்கும் திரைப்படத்திற்காக வீணாக்க பணமும் நேரமும் இருப்பவர்களுக்கு இலக்கியத்திற்கு ஏன் நேரம் கிடைப்பதில்லை?

இதை படித்தால், எனக்கு நீங்கள் இரண்டு உதவிகள் செய்யுங்கள்,
அ. இளைஞர்களை ஏன் இலக்கியம் கவரவில்லை என்று உங்களுக்கு தெரிந்த கரணியத்தை எனக்கும் தெரிவியுங்கள்
ஆ. இளைஞர்களை எப்படி இலக்கியத்தின் பக்கம் கவர்வது என்பதையும் சொல்லுங்கள் (சென்னையில் ஒரு இலக்கிய வட்டம் துவங்க விருப்பம் எனக்கு!)


மேலுமொரு செய்தி:

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள “லியோ மேன்நிலைப் பள்ளி”யில் காரிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்குத் துவங்கி சொற்பொழிவு நடக்கிறது - சென்னை அன்பர்கள் கலந்துகொள்ள முயலவும்.

பேரவையின் செயலாளர் :
திரு. நாகசுந்தரம்
தொ.பே: 044 26164387
கை.பே: 98404 68277

2 comments:

  1. In a way I think it is more to do with our education. No one would like to take an Arts course for higher education for obvious reasons (No financial gain). I might think a solution to this is to have arts subjects optional in Engineering and Medical courses. Today these courses totally ignore arts subjects. Having personally spent 20 years in technology field, I can easily say creativity is a major element in coming with good technical solutions. Thus learning art subjects can help us solve our technical challenges as well. I hope our students and educators realise this.

    ReplyDelete
    Replies
    1. Rightly pointed out... More than that, people have been taught to look at 'Tamil' and its literature as a mere collection of songs, what they fail to understand is that in olden days these sons served as the medium for all knowledge transactions... Still they contains a vast treasure of knowledge in them unexplored... Only people who are well versed in both the language and today's modern science can decipher and bring to light the time-covered ancient knowledge of the Tamils. Thanks for reading and commenting :-)

      Delete